Tuesday 23 April 2013

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!


ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறைசாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது ? ? ?  கோயில் எப்படி கட்டப்பட்டது ????

பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும்.

10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.

இத்தகைய பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.

கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும்.

பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

சுமார் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும்.

பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள
உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. !!

*முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன பிற்காலங்களில் கட்டப்பட்டன.

*தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது

*1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாளை (சதயவிழா) அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

*1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது



* தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 1954ம் ஆண்டு பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்ட 1000 ரூபாய் தாள், 1995ம் ஆண்டு ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலை, 2010ம் ஆண்டு ராஜராஜ சோழன் உருவம் பதித்த 5 ரூபாய் நாணயம் ஆகியன இந்திய அரசால் வெளியிடப்பட்டன.

Monday 8 April 2013

சங்கப் புலவர் அகரவரிசை



தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே புலவர்களின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளளது. எனினும் இப்பெயர்கள் நூல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளதால் 473 புலவர்களின் பெயர்களையும் தொகுப்பாகக் காண இயலவில்லை. அதனால் நான் இப்பெயர்களை அகர வரிசையில் அளித்துள்ளேன்.
பெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும். சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால... மக்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியனவும் அறியமுடிகிறது.
இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது. இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது. பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும்.

சங்கப் புலவர் அகரவரிசை


1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
8) அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
27) ஆவூர்கிழார்
28) ஆலியார்
29) ஆவூர் மூலங்கீரனார்
30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
31) இடைக்காடனார்
32) இடைக்குன்றூர்கிழார்
33) இடையன் சேந்தன் கொற்றனார்
34) இடையன் நெடுங்கீரனார்
35) இம்மென்கீரனார்
36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்
39) இரும்பிடர்தலையார்
40) இளங்கீரந்தையார்
41) இளங்கீரனார்
42) இளநாகனார்
43) இளந்திரையன்
44) இளந்தேவனார்
45) இளம்புல்லூர்க் காவிதி
46) இளம்பூதனார்
47) இளம்பெருவழுதி
48) இளம்போதியார்
49) இளவெயினனார்
50) இறங்குடிக் குன்றநாடன்
51) இறையனார்
52) இனிசந்த நாகனார்
53) ஈழத்துப் பூதந்தேவனார்
54) உகாய்க் குடிகிழார்
55) உக்கிரப் பெருவழுதி
56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்
58) உருத்திரனார்
59) உலோச்சனார்
60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
61) உழுந்தினைம் புலவர்
62) உறையனார்
63) உறையூர் இளம்பொன் வாணிகனார்
64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
66) உறையூர்ச் சல்லியங் குமரனார்
67) உறையூர்ச் சிறுகந்தனார்
68) உறையூர்ப் பல்காயனார்
69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்
70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
71) ஊட்டியார்
72) ஊண்பித்தை
73) ஊண்பொதி பசுங்குடையார்
74) எயிற்றியனார்
75) எயினந்தையார்
76) எருமை வெளியனார்
77) எருமை வெளியனார் மகனார் கடலனார்
78) எழூப்பன்றி நாகன் குமரனார்
79) ஐயாதி சிறு வெண்ரையார்
80) ஐயூர் முடவனார்
81) ஐயூர் மூலங்கீரனார்
82) ஒக்கூர் மாசாத்தனார்
83) ஒக்கூர் மாசாத்தியார்
84) ஒருசிறைப் பெரியனார்
85) ஒரூத்தனார்
86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
87) ஓதஞானி
88) ஓதலாந்தையார்
89) ஓரம்போகியார்
90) ஓரிற்பிச்சையார்
91) ஓரேர் உழவர்
92) ஔவையார்
93) கங்குல் வெள்ளத்தார்
94) கச்சிப்பேடு இளந்தச்சன்
95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்
97) கடம்பனூர்ச் சாண்டில்யன்
98) கடலூர்ப் பல்கண்ணனார்
99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
100) கடுந்தொடைக் காவினார்
101) கடுந்தொடைக் கரவீரன்
102) கடுவன் இளமள்ளனார்
103) கடுவன் இளவெயினனார்
104) கடுவன் மள்ளனார்
105) கணக்காயன் தத்தனார்
106) கணியன் பூங்குன்றனார்
107) கண்ணகனார்
108) கண்ணகாரன் கொற்றனார்
109) கண்ணங்கொற்றனார்
110) கண்ணம் புல்லனார்
111) கண்ணனார்
112) கதக்கண்ணனார்
113) கதப்பிள்ளையார்
114) கந்தரத்தனார்
115) கபிலர்
116) கயத்தூர்கிழார்
117) கயமனார்
118) கருங்குழலாதனார்
119) கரும்பிள்ளைப் பூதனார்
120) கருவூர்க்கிழார்
121) கருவூர் கண்ணம்பாளனார்
122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
123) கருவூர் கலிங்கத்தார்
124) கருவூர் கோசனார்
125) கருவூர் சேரமான் சாத்தன்
126) கருவூர் நன்மார்பனார்
127) கருவூர் பவுத்திரனார்
128) கருவூர் பூதஞ்சாத்தனார்
129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
130) கல்பொருசிறுநுரையார்
131) கல்லாடனார்
132) கவைமகன்
133) கழாத்தலையார்
134) கழார்க் கீரனெயிற்றியனார்
135) கழார்க் கீரனெயிற்றியார்
136) கழைதின் யானையார்
137) கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
138) கள்ளில் ஆத்திரையனார்
139) காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
140) காசிபன் கீரன்
141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
142) காப்பியஞ்சேந்தனார்
143) காப்பியாற்றுக் காப்பியனார்
144) காமஞ்சேர் குளத்தார்
145) காரிக்கிழார்
146) காலெறி கடிகையார்
147) காவட்டனார்
148) காவற்பெண்டு
149) காவன்முல்லையார்
150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் 
நப்பூதனார்
155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
158) கிள்ளிமங்கலங்கிழார்
159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
160) கீரங்கீரனார்
161) கீரந்தையார்
162) குடபுலவியனார்
163) குடவாயிற் கீரத்தனார்
164) குட்டுவன் கண்ணனார்
165) குட்டுவன் கீரனார்
166) குண்டுகட் பாலியாதனார்
167) குதிரைத் தறியனார்
168) குப்பைக் கோழியார்
169) குமட்டூர் கண்ணனார்
170) குமுழிஞாழலார் நப்பசலையார்
171) குழற்றத்தனார்
172) குளம்பனார்
173) குளம்பாதாயனார்
174) குறமகள் இளவெயினி
175) குறமகள் குறியெயினி
176) குறியிறையார்
177) குறுங்கீரனார்
178) குறுங்குடி மருதனார்
179) குறுங்கோழியூர் கிழார்
180) குன்றம் பூதனார்
181) குன்றியனார்
182) குன்றூர்க் கிழார் மகனார்
183) கூகைக் கோழியார்
184) கூடலூர்க் கிழார்
185) கூடலூர்ப பல்கண்ணனார்
186) கூவன்மைந்தன்
187) கூற்றங்குமரனார்
188) கேசவனார்
189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
190) கொட்டம்பலவனார்
191) கொல்லன் அழிசி
192) கொல்லிக் கண்ணன்
193) கொள்ளம்பக்கனார்
194) கொற்றங்கொற்றனார்
195) கோக்குளமுற்றனார்
196) கோடைபாடிய பெரும்பூதன்
197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
198) கோட்டியூர் நல்லந்தையார்
199) கோண்மா நெடுங்கோட்டனார்
200) கோப்பெருஞ்சோழன்
201) கோவர்த்தனர்
202) கோவூர்க் கிழார்
203) கோவேங்கைப் பெருங்கதவனார்
204) கோழிக் கொற்றனார்
205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
207) சங்கவருணர் என்னும் நாகரியர்
208) சத்திநாதனார்
209) சல்லியங்குமரனார்
210) சாகலாசனார்
211) சாத்தந்தந்தையார்
212) சாத்தனார்
213) சிறுமோலிகனார்
214) சிறுவெண்டேரையார்
215) சிறைக்குடி ஆந்தையார்
216) சீத்தலைச் சாத்தனார்
217) செங்கண்ணனார்
218) செம்பியனார்
219) செம்புலப்பெயல்நீரார்
220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
221) செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
223) செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
224) சேந்தங்கண்ணனார்
225) சேந்தம்பூதனார்
226) சேந்தங்கீரனார்
227) சேரமானெந்தை
228) சேரமான் இளங்குட்டுவன்
229) சேரமான் கணைக்கால் இரும்பொறை
230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
233) சோழன் நலங்கிள்ளி
234) சோழன் நல்லுருத்திரன்
235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
237) தனிமகனார்
238) தாமாப்பல் கண்ணனார்
239) தாமோதரனார்
240) தாயங்கண்ணனார்
241) தாயங்கண்ணியார்
242) திப்புத்தோளார்
243) திருத்தாமனார்
244) தீன்மதிநாகனார்
245) தும்பிசேர்கீரனார்
246) துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
247) துறையூர்ஓடைக்கிழார்
248) தூங்கலோரியார்
249) தேய்புரி பழங்கயிற்றினார்
250) தேரதரன்
251) தேவகுலத்தார்
252) தேவனார்
253) தொடித்தலை விழுத்தண்டினர்
254) தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
255) தொல்கபிலர்
256) நக்கண்ணையார்
257) நக்கீரர்
258) நப்பசலையார்
259) நப்பண்ணனார்
260) நப்பாலத்தனார்
261) நம்பிகுட்டுவன்
262) நரிவெரூத்தலையார்
263) நரைமுடி நெட்டையார்
264) நல்லச்சுதனார்
265) நல்லந்துவனார்
266) நல்லழிசியார்
267) நல்லாவூர்க் கிழார்
268) நல்லிறையனார்
269) நல்லுருத்திரனார்
270) நல்லூர்ச் சிறுமேதாவியார்
271) நல்லெழுநியார்
272) நல்வழுதியார்
273) நல்விளக்கனார்
274) நல்வெள்ளியார்
275) நல்வேட்டனார்
276) நற்சேந்தனார்
277) நற்றங்கொற்றனார்
278) நற்றமனார்
279) நன்பலூர்ச் சிறுமேதாவியார்
280) நன்னாகனார்
281) நன்னாகையார்
282) நாகம்போத்தன்
283) நாமலார் மகன் இளங்கண்ணன்
284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
285) நெடுங்கழுத்துப் பரணர்
286) நெடும்பல்லியத்தனார்
287) நெடும்பல்லியத்தை
288) நெடுவெண்ணிலவினார்
289) நெட்டிமையார்
290) நெய்தற் கார்க்கியார்
291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
292) நெய்தற்றத்தனார்
293) நொச்சி நியமங்கிழார்
294) நோய்பாடியார்
295) பக்குடுக்கை நன்கணியார்
296) படுமரத்து மோசிகீரனார்
297) படுமரத்து மோசிக்கொற்றனார்
298) பதடிவைகலார்
299) பதுமனார்
300) பரணர்
301) பராயனார்
302) பரூஉமோவாய்ப் பதுமனார்
303) பறநாட்டுப் பெருங்கொற்றனார்
304) பனம்பாரனார்
305) பாண்டரங்கண்ணனார்
306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற 
நெடுஞ்செழியன்
309) பாண்டியன் பன்னாடு தந்தான்
310) பாண்டியன் மாறன் வழுதி
311) பாரதம் பாடிய பெருந்தேவனார்
312) பாரிமகளிர்
313) பார்காப்பான்
314) பாலைக் கௌதமனார்
315) பாலை பாடிய பெருங்கடுங்கோ
316) பாவைக் கொட்டிலார்
317) பிசிராந்தையார்
318) பிரமசாரி
319) பிரமனார்
320) பிரான் சாத்தனார்
321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
322) புல்லாற்றூர் எயிற்றியனார்
323) பூங்கணுத் திரையார்
324) பூங்கண்ணன்
325) பூதங்கண்ணனார்
326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
327) பூதம்புல்லனார்
328) பூதனார்
329) பூதந்தேவனார்
330) பெருங்கண்ணனார்
331) பெருங்குன்றூர்க் கிழார்
332) பெருங்கௌசிகனார்
333) பெருஞ்சாத்தனார்
334) பெருஞ்சித்திரனார்
335) பெருந்தலைச்சாத்தனார்
336) பெருந்தேவனார்
337) பெருந்தோட் குறுஞ்சாத்தன்
338) பெரும் பதுமனார்
339) பெரும்பாக்கன்
340) பெருவழுதி
341) பேயனார்
342) பேய்மகள் இளவெயினி
343) பேராலவாயர்
344) பேரிசாத்தனார்
345) பேரெயின்முறுவலார்
346) பொதுக்கயத்துக் கீரந்தை
347) பொதும்பில் கிழார்
348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
350) பொத்தியார்
351) பொய்கையார்
352) பொருந்தில் இளங்கீரனார்
353) பொன்மணியார்
354) பொன்முடியார்
355) பொன்னாகன்
356) போதனார்
357) போந்தைப் பசலையார்
358) மடல் பாடிய மாதங்கீரனார்
359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
363) மதுரை இனங்கௌசிகனார்
364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
368) மதுரைக் கணக்காயனார்
369) மதுரைக் கண்டராதித்தனார்
370) மதுரைக் கண்ணத்தனார்
371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்
372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
374) மதுரைக் காருலவியங் கூத்தனார்
375) மதுரைக் கூத்தனார்
376) மதுரைக் கொல்லன் புல்லன்
377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
378) மதுரைச் சுள்ளம் போதனார்
379) மதுரைத் தத்தங்கண்ணனார்
380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
381) மதுரைத் தமிழக் கூத்தனார்
382) மதுரைப் படைமங்க மன்னியார்
383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
386) மதுரைப் புல்லங்கண்ணனார்
387) மதுரைப் பூதனிள நாகனார்
388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
389) மதுரைப் பெருங்கொல்லன்
390) மதுரைப் பெருமருதனார்
391) மதுரைப் பெருமருதிளநாகனார்
392) மதுரைப் போத்தனார்
393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
396) மதுரை வேளாசன்
397) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
400) மருதம் பாடிய இளங்கடுங்கோ
401) மருதனிளநாகனார்
402) மலையனார்
403) மள்ளனார்
404) மாங்குடிமருதனார்
405) மாடலூர் கிழார் 
406) மாதீர்த்தன்
407) மாமிலாடன்
408) மாமூலனார்
409) மாயேண்டன்
410) மார்க்கண்டேயனார்
411) மாலைமாறன்
412) மாவளத்தன்
413) மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
414) மாறோக்கத்து நப்பசலையார்
415) மாற்பித்தியார்
416) மிளைக் கந்தன்
417) மிளைப் பெருங்கந்தன்
418) மிளைவேள் பித்தன்
419) மீனெறி தூண்டிலார்
420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
422) முடத்தாமக்கண்ணியார்
423) முடத்திருமாறன்
424) முதுகூத்தனார்
425) முதுவெங்கண்ணனார்
426) முப்பேர் நாகனார்
427) முரஞ்சியயூர் முடிநாகராயர்
428) முள்ளியூர்ப் பூதியார்
429) முலங்கீரனார்
430) மையோடக் கோவனார்
431) மோசிக்கண்ணத்தனார்
432) மோசிக்கீரனார்
433) மோசிக்கொற்றன்
434) மோசிக்கரையனார்
435) மோசிசாத்தனார்
436) மோசிதாசனார்
437) வடநெடுந்தத்தனார்
438) வடவண்ணக்கன் தாமோதரன்
439) வடமோதங்கிழார்
440) வருமுலையாரித்தி
441) வன்பரணர்
442) வண்ணக்கன் சோருமருங்குமரனார்
443) வண்ணப்புறக் கந்தரத்தனார்
444) வாடாப்பிராந்தன்
445) வாயிலான் தேவன்
446) வாயிலிலங்கண்ணன்
447) வான்மீகியார்
448) விட்டகுதிரையார்
449) விரிச்சியூர் நன்னாகனார்
450) விரியூர் நன்னாகனார்
451) வில்லக விரலினார்
452) விழிகட்பேதை பெருங்கண்ணனார்
453) விற்றூற்று மூதெயினனார்
454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
455) வினைத் தொழில் சோகீரனார்
456) வீரை வெளியனார்
457) வீரை வெளியன் தித்தனார்
458) வெண்கண்ணனார்
459) வெண்கொற்றன்
460) வெண்ணிக் குயத்தியார்
461) வெண்பூதன்
462) வெண்பூதியார்
463) வெண்மணிப்பூதி
464) வெள்ளாடியனார்
465) வெள்ளியந்தின்னனார்
466) வெள்ளிவீதியார்
467) வெள்வெருக்கிலையார்
468) வெள்ளைக்குடி நாகனார்
469) வெள்ளைமாளர்
470) வெறிபாடிய காமக்கண்ணியார்
471) வேட்டகண்ணன்
472) வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
473) வேம்பற்றுக் குமரன்

Sunday 7 April 2013

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி


ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.

Thursday 4 April 2013

சீரகம்


சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். அகத்தைச் சீர் செய்வதால் சீரகம்(சீர் + அகம்) எனச் சித்தர்களால் அழைக்கப்பட்டது.

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே

-ஆசான் தேரையர்-

Monday 1 April 2013

திருச்சிராப்பள்ளி - பெயர்க் காரணம்


திருச்சிராப்பள்ளி என்ற பெயர் திரிஷிராபுரம் (திரிஷிரா-மூன்று தலை; புரம்-ஊர்) என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து தோன்றியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இந்து சமயப்புராணங்களில் 'திரிசிரன்' என்ற பெயருடைய மூன்று சிரங்களைக் கொண்ட அரக்கன்,

இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனைடைந்தததாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்குத் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்து நிலவினாலும் அது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சி. பி. பிரவுன் எனும் தெலுங்கு அறிஞர் சிறிய ஊர் எனப் பொருள் தரும் "சிறுத்த-பள்ளி" என்ற வார்த்தையிலிருந்து திருச்சிராப்பள்ளி என உருவாகியிருக்கும் என்ற கருத்தைத் தருகிறார். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா- பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது.

வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.

இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா

துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.