Sunday 30 June 2013

1877-78 பஞ்சம்


1877 லிருந்து 78 வரை மதராஸ் மாகாணத்தை பிடித்த பஞ்சத்தை வரலாற்றால் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது. அதிகார சீர்கேட்டால் சீரழிந்த நம் மக்கள் கொத்துக் கொத்தாய் மாண்ட காலமது. அப்படி பஞ்சத்தின் பிடியில் இருந்த ஒரு குடும்பத்தின் காட்சி இது. இந்த பஞ்சத்தை பற்றி தாது வருசப் பஞ்சக் கும்மி என்ற ஒரு நூலே இயற்றப்பட்டது. அதிலிருந்து ஒரு பாடல் :

''மரக்கால் உருண்ட பஞ்சம் மன்னரைத் தோற்ற பஞ்சம்
நாழி யுருண்ட பஞ்சம் நாயகனைத் தோற்ற பஞ்சம்
ஆழாக்கு உருண்ட பஞ்சம் ஆளனைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து தனிவழியே நின்ற பஞ்சம்
கூறை பறி கொடுத்துக் கொழுநனைத் தோற்ற பஞ்சம்
கணவனைப் பறி கொடுத்து கைக்குழந்தை விற்ற பஞ்சம்''

No comments:

Post a Comment