Wednesday 8 October 2014

கர்ணனின் வலிமை

கர்ணன் அர்ச்சுனன் இறுதி போரில் நடந்த பிரபலமிக்க சம்பவம் :

போரில் அர்ச்சுனனின் தாக்குதலில் கர்ணனின் ரதம், 60 அடிகள் வரை பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதே அர்ச்சுனனின் ரதம், கர்ணனின் தாக்குதலில் 2 அங்குலங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளப்பட்டது.

உடனே கண்ணன், கர்ணனைப் பாராட்டினார். அர்ச்சுனன் கோபம் கொண்டு, கண்ணனைக் கேட்டான். "என் தாக்குதலில் கர்ணனின் ரதம் 60 அடிகள் நகர்ந்ததே அதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. நமது ரதம் 2 அங்குலங்கள் நகர்ந்தற்க்கு அவனைப் பாராட்டுகிறீர்களே??? "

அதற்கு கண்ணன் "ஆம் அர்ச்சுனா, அவன் ரதத்தில் மனிதர்களான சல்லியனும், கர்ணனும் மட்டும்தான் இருக்கிறார்கள். உன் ரதத்தில், மூவுலகையும் தன்னுள்ளே அடக்கிய நான் இருக்கிறேன், மூவுலகங்களும் என்னுள் அடக்கம். கூடவே உன் தேரின் கொடியில் மகா பலசாலியாய் அனைவராலும் அறியப்பட்ட அனுமன் இருக்கிறார்.

நாங்கள் இருவரும் இருக்கும் ரதத்தை எந்த மனிதனாலும் அசைக்கக் கூட முடியாது. ஆனால், கர்ணனின் தாக்குதலில் ரதம், இரண்டு அங்குலங்கள் வரை  நகர்ந்துவிட்டது.

சற்று யோசித்து பார் உன் ரதத்தில் நானும் அனுமனும் இல்லையெனில் கர்ணன் செலுத்திய பாணத்திற்கு உன் ரதம் பூமியை விட்டே தூக்கி எறியப்பட்டிருக்கும்" என்றார்.

"தனித்திருந்தாலும் வலிமை மிக்கவன் கர்ணன்"

No comments:

Post a Comment