Thursday 28 February 2013

அதே கண்கள்



தோழியின் சகோதரி திருமணத்தில் 

பூக்கட்டும் இடத்தில் பூத்தவள் 

ஒரு மழைக்கால ரயில் பயணத்தில் 

ஈரமாய் என்னை ஈர்த்தவள் 

மாரியம்மன் கோயில் அன்னதானப் பந்தலில்

விருந்தோடு விழியால் விழுங்கியவள் 

ஓர் கோடை விடுமுறைக் காளானாய் 

எதிர்வீட்டுத் திண்ணையில் முளைத்தவள் 

இப்படியாக எத்தனையோ 

விழியால் வரம் தந்து மறைந்த 

தற்காலிக தேவதைகள் 

அறிந்தோ அறியாமலோ 

அணிந்திருந்தார்கள் 

எனக்கான அதே கண்களை 


- ஷான் 


No comments:

Post a Comment